Skip to content
Home » காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்…. டில்லி முதல்வர்

காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்…. டில்லி முதல்வர்

  • by Senthil

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டில்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டில்லி நீதிமன்றம், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் தெரிவித்துள்ளார். மார்ச் 16-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!