Skip to content
Home » கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

  • by Senthil

கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ்பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து கேரள மதுபான கழகம் (பெவ்கோ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேரளா முழுவதும் மதுபான சில்லறை கடைகள் மூலம் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் (22,23,24) ரூ.154 கோடியே 78 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ரூ.144 கோடியே 91 லட்சத்திற்கு விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு 22, 23 ஆகிய 2 நாட்களில் ரூ.80 கோடியே 4 லட்சத்திற்கும், 24-ந் தேதி ரூ.70 கோடியே 74 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக,சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!