Skip to content
Home » வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஆதித்யன். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதித்யனுக்கும், அவர் பணியாற்றி வந்த நிதி நிறுவன உரிமையாளருக்கும் இடையே நிதி விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அன்று காலை, இருவருக்கும் இடையே இது தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதையடுத்து நிதிப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் ஆதித்யன். இந்நிலையில் நேற்று மாலை 7.15 மணியளவில் ஆதித்யன் ஊரூட்டுகலா என்ற பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆதித்யனை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் கழுத்தில் வெட்டுப்பட்டு, படுகாயம் அடைந்த ஆதித்யன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!