முதல்வர் விஜய் தேர்தலில் வென்றபோது தனது மகள் அனந்திகா கண்ணீர்விட்டு அழுததாக குஷ்பு தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சுந்தர்.சி தோல்வி அடைந்ததற்கு தான் அவள் அழுகிறாள் என முதலில் நினைத்தோம். ஆனால், விஜய் ஜெயித்துவிட்டார். இனிமேல் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி விடுவார் எனக் கூறி அழுதார். அனந்திகா விஜய்யின் தீவிர ரசிகை என குஷ்பு தெரிவித்துள்ளார்.
