Skip to content
Home » கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலை ஒட்டி கடந்த ஒரு மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளுத்தும் வெயிலிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (வலது)
கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (வலது)

இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் ஓய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு சென்று கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். முதல்வர் ஸ்டாலின் கோல்ஃப் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.
கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்ல உள்ளதால் கொடைக்கானலில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!