Skip to content
Home » கொடநாடு……ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி….. முரசொலி கேள்வி

கொடநாடு……ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி….. முரசொலி கேள்வி

  • by Senthil

ஏன் பதறுகிறார் பழனிசாமி என்ற தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் தீட்டி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

‘கொடநாடு’ என்று சொன்னாலே ‘கொல நடுக்கம்’ ஏற்படுகிறது. பழனிசாமிக்கு, அதிகமாகப் பதறுகிறார் பழனிசாமி. எதற்காக அவர் பதற வேண்டும்?

“எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லத் தயார்” என்று என்றாவது சி.பி.சி.ஐ.டி வாசலுக்கு அவர் வந்திருந்தால் அவரை நம்பலாம். ஆனால், அவரது பதற்றமே அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

(ஜெயயலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தன்பால்  ஊடகங்களுக்கு பேட்டி அரித்துள்ளார். அந்தப் பேட்டியைப் பார்த்ததும் பழனிசாமியின் பிபி எகிறுகிறது.

“கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். கொடநாட்டில்  இருந்து 5 பைகள் நிறைய ஆவணங்களை எனது தம்பி கனகராஜ் கொண்டு வந்தார். பேருந்துறையின் வைத்து அதனை என்னிடம் காண் பித்தார். அதில், 3 பை சங்ககிரிக்கும். 2 பை சேலத்திற்கும் எனது தம்பி எடுத்து சென்றான்.
இதுதான் கடந்த 25 ம் தேதி சேலத்தில் வைத்து பழனிசாமி கொடுத்த பேட்டி ஆகும், கனகராஜ். யாருக்கு கார் டிரைவராக இருந்தார் என்ப தல்ல பிரச்சினை. கனகராஜை ஏவியது யார் என்பதுதான் கேள்வி.

கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தது 2017 ஏப்ரல் 23 ம் தேதி. அப்போது முதலமைச்சராக இருந்தவர் பழனிசாமி. அன்றைய தினமே ஓம்பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.

அடுத்த ஐந்தாவது நாள் அதாவது ஏப்ரல் 28 ம் தேதி ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் மர்மமன முறையில் கனகராஜ் இறந்து கிடந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற கனகராஜ் மீது கார் மோதியநாக அ.தி.மு.உ ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. இது விபந்து அல்ல. என் சகோதரர் மரணத்தில் மர்மம் உள்ளது என்று கனகராஜின் சகோதரர் தன்பால் அன்று முதல் சொல்லி வருகிறார்.

கனகராஜ் சொல்லி இந்தச் சம்பவத்தைச் செய்த சயான மீது இதே போல் மர்மமான வகையில் கார்மோதுகிறது. அதில் சம்பவ இடத்திலேயே சயானின் மனைவியும், மகளும் மரணம் அடைகிறார்கள். * கொடநாடு எஸ்டேட்டின் சி.சி.டி.வியை கையாளும் தீனேஷருமார் என்பவர் மர்மமான முறையில் தற்கொலை  செய்து கொள்கிறார். இந்த வகையில் ஒரு கெள்ளை – ஒரு கொலை – மூன்று மர்ம மரணங்கள் – ஒரு தற்கொலை ஆசியவை நடந்த மர்மமான வழக்கு.

இது பழனிசாமி ஆட்சி செய்தபோது நான் இது நடந்தது. ஆ.தி.மு.க ஆட்சியில் சிலரை கைது செய்து கணக்குக் காட்டி முடிக்கப் பார்த்தார்கள். தி.மு.க. ஆட்சி மாறியதும், வழக்கின் விசாரணை உண்மையாக நடக்கத் தொடங்கியது.

குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களே, நாங்கள் இன்னும் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்” என்று முன் வந்ததால் அந்த வழக்கு மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை யைத் தொடங்கியதும், பதற்றம் ஆனார் பழனிசாமி. 2021 ஆகஸ்ட் 18 ம் நாள் சட்டமன்றத்தில் கொந்தளித்தாா். வெளிநடப்பு செய்தார். உடனடியாக ஆளுநரிடம் போய் மனு கொடுத்தார். ‘என்னைக்  கைது செய்ய சதி’ என்று அலறினார். “கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக் கக் கூடாது. சயன் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. இதை மீண்டும் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் கேரளாவைச் சேய்ந்தவர்கள். சயன் வாக்குமூலத்தில் என்னையும் இணைத்துள்ளார்கள். மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்கள். பழிவாங்க இதை ஜோடிக்கிறார்கள்” என்று ஏதேதோ சொன்னார் பழனிசாமி.
ஒரு வழக்கை மீண்டும் விரிக்கக் கூடாது என்று சொல்ல இவர் யார்? வந்த வழக்கையும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல் துறை நடத்தலாம். புலன் விசாரணை என்பது குற்றவியல்  விசாரணை நடைமுறை சட்டத்தின் 173(9) பியின் படி நடத்தப்படுவது, அதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல் துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு. அதன்படி தான் கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது.

சட்டப்படி தான் நடக்கிறது விசாரணை. அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!