Skip to content
Home » கோழி பண்ணையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..

கோழி பண்ணையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..

  • by Senthil

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மாவட்ட தலைவர் உத்திராபதி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய தலைவர் அன்வர் அலி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் முகமது வஹி மன்சூர் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது….

நான் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கு சொந்தமான கோழிப்பண்ணை கொட்டகை சேதுபாவாசத்திரம் சம்பைப்பட்டினத்தில் உள்ளது. கடந்த 1ம் தேதி அன்று நள்ளிரவு நேரத்தில் இந்த கோழிப்பண்ணை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டனர். இதில் கொட்டகையில் இருந்த இயந்திரங்கள், மின் மோட்டார்கள், தளவாடப் பொருட்கள், கோழிகளுக்கு உணவு வைக்கும் பொருட்கள் என ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!