Skip to content
Home » கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் 19 வயதான சரவணன். இவர் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான ரியாஸ், 16 வயதான தருண், 19 வயதான பிரகதீஸ்,16 வயதான சுரேந்தர் ஆகிய 5 பேரும் மங்கம்மாள்புரம் ஊராட்சியில் உள்ள நாகப்பசுவாமி கோவில் படித்துறை அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க வந்துள்ளனர்.அப்போது எதிர்பாராதமாக இரண்டு பேர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் ஒருவரை காப்பாற்றிய நிலையில் சரவணன் நீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!