Skip to content
Home » கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Senthil

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதாகவும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கோவை டவுன்ஹால் பகுதி

இடையர் வீதியில் வட மாநில நபர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக அப்பகுதியில் 100-க்கு மேற்பட்டோர் கூடினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இடையர் வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தற்போது தனிந்திருக்கும் நிலையில் இச்சம்வத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!