Skip to content
Home » கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போத்தனூர், கவுண்டபாளையம், வடவள்ளி, கோவைபுதூர், சாய்பாபா காலனி, துடியலூர், காந்திபுரம், குனியமுத்தூர், ராமநாதபுரம் ,பீளமேடு, ஆவாரம்பாளையம், சுந்தராபுரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இடி, மின்னல், காற்று என எதுவும் இன்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!