Skip to content
Home » கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

  • by Senthil

கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அமைந்து உள்ளது 24 வீரபாண்டி கிராமம் அங்கு உள்ள செங்கல் சூளையில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள். இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். யானையை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு யானையை விரட்ட சத்தம்

எழுப்பியதால் யானை செய்வதறியாது அங்குமிங்கமாக ஓடத் தொடங்கியது மேலும் சத்தம் எழுதிய இளைஞர்களை துரத்தியது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் யானைக்கு ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு அதனை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!