Skip to content
Home » கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் சந்தேகப்படுபவர்களையும் அழைத்து வந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அல் அமீன் காலனியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆன ரகுமான் என்பவர் இல்லத்தில் இன்று அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மொத்தம் 12 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரபிக் கல்லூரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் இன்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!