Skip to content
Home » மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு…. நொய்யலாற்றில் வெள்ளம்

மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு…. நொய்யலாற்றில் வெள்ளம்

தமிழ்நாட்டில் மீண்டும்  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (வியாழன்) முதல் 3 நாட்களுக்கு  பெரும்பாலான  இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை முதல் திருச்சி மாநகரிலும்,  பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் கும்மிருட்டாக காணப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று  விடிய விடிய கனமழை கொட்டியது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காலை 8 மணிவரையிலான 24 மணி நேரத்தில் 37 செ.மீ. மழை பெய்துள்ளது.  சிறுவாணி அடிவாரத்தில் 10. செ.மீ. மழை பதிவானது.  கோவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!