Skip to content
Home » கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மருதமலை அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்க ளை சேதப்படுத்தி அட்ட காசத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து கணுவாய் வழியாக மருதமலை அடிவாரத்திற்கு குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்தன.

இந்த காட்டு யானைகள் மருதமலை அடிவாரம், பாரதியார் பல்லைக்கழகம், ஐ.ஓ.பி.காலனி, யானை மடுவு உள்ளிட்ட பகுதியி லேயே 2 நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. நேற்று பாரதியார் பல்க லைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் 20 காட்டு யானைகள் முகாமிட்டி ருந்தன. இதுபற்றிய தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த காட்டு யானைகள் யானைமடுவு பகுதியில் நின்று கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வலம் வருகின்றன. மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ள தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் அந்த யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!