Skip to content
Home » கோவை மீனா, கரூர் பத்மா வீடுகளிலும் ஐடி ரெய்டு

கோவை மீனா, கரூர் பத்மா வீடுகளிலும் ஐடி ரெய்டு

  • by Senthil

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள  பைனான்சியர்  சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் கே.வி.பி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சக்திவேல் என்பவரது வீட்டில் இரண்டு கார்களில் வந்த வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..

5  வெள்ளை நிற  இன்னோவா கார்களில்  வந்த சுமார்20 அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல கோவையை சேர்ந்த  திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் என்பவரது வீட்டிலும், அவரது மகன்  வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. இவர்கள்  அமைச்சர் எ.வ. வேலுவுடன்  தொடர்பில் உள்ளவர்கள் என  கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!