Skip to content
Home » கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்தில் பாலக்காடு வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த மாதம் இதே பகுதியில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்றிக்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை பாலக்காடு மதுக்கரை இடையே ரயில் மோதி 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!