Skip to content
Home » கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து பனை மரங்களை வெட்டி கடத்தபடுவதாக கோட்டூர்  போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து கோட்டூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்க்கும்

பொழுது அங்கு அனுமதி இன்றி 7  பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற மகாலிங்கம், சபாபதி, கண்ணன், சுகுணாபிரகாஷ், முருகவேல, சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கோட்டூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தோட்டத்தில் உரிமையாளருக்கு தெரியாமல் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரிய வந்தது, இதனை அடுத்து 6 பேரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு பேசப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!