Skip to content
Home » பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் வீட்டின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே நுழைந்து, வீட்டில் உள்அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பாலதண்டபாணியின் மனைவி நிவேதா (27)என்பவரின் கழுத்தில் கத்தியால்

குத்தி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிவேதாவின் பாட்டி நாச்சம்மாள் வெளியே ஓடி வர மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீஸார் கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் ஆய்வு நடத்தினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காயம் அடைந்த நிவேதா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!