Skip to content
Home » வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனத்துறை சோதனைச்சாவடி அருகில் இரண்டு நாட்களாக காட்டு யானை சுற்றி திரிந்து உள்ளது. நேற்றுஇரவு ஏழு மணிவளவில் காட்டு யானை இறங்கி பட்டா பூமிக்குள் வந்தது தெரிந்த வனத்துறையினர் பாலு, முரளி ,சித்தன் ஆகியோர் வனத்துறை வாகனத்தில் ஜிப்பில் சென்று சோமு என்பவரது தோட்டம் அருகே நிறுத்திவிட்டு யானையை விரட்ட நடந்து சென்றுள்ளனர். தோட்டத்தில் இருந்த ரிசாட் உரிமையாளர் சோமு, ஏற்கனவே யானை கம்பி வேலியை சேதப்படுத்தியதாகவும் இன்று இரவு ஏதேனும் யானை சேதப்படுத்தினால் பணம் கொடுக்க வேண்டும் என கூறி ஜுப்பை எடுத்துள்ளார்,

இதற்க்கு ஜீப் டிரைவர் பாலு ஜீப்பை கேட்டபோது சோமு சாவியை கொடுக்க மறுத்துள்ளார். பின்பு பாலு பேசி சாவியை வாங்கி ஜுப்பை எடுத்த போது சோமு அங்கிருந்த கல்லை எடுத்து வீசியதில் முன்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. வனவர் சின்னான் கொடுத்த புகாரின் பேரில் ரிசாட் உரிமையாளர் சோமுவை ஆனைமலை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,வனத்துறை வாகனத்தை கல்லால் எடுத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!