Skip to content
Home » டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிகளுக்கு அருகே பாம்பு ஒன்று ஊர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பாம்புபிடி வீரர் மோகன்குமார் பாம்பை பத்திரமாக மீட்டார்
பாம்புபிடி வீரர் மோகன்குமார் பாம்பை பத்திரமாக மீட்டார்
ஆனால் பாம்பு ஒரே இடத்தில் ஊர்ந்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் பார்த்த போது, பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் டேப்பில் பாம்பு, சிக்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற அதே பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு
மீட்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு
இதையடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் அங்கு வந்த மோகன்குமார், பாம்பை மீட்டு, அதன் உடலில் ஒட்டியிருந்த டேப்பை கவனத்துடன் நீக்கி, பாம்பை மீட்டார். மீட்கப்பட்ட பாம்பு சுமார் ஒரு அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு வகையைச் சேர்ந்ததாகும். விஷப்பாம்பின் உயிரை காத்த பாம்புபிடி வீரருக்கு அங்கிருந்த தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!