Skip to content
Home » தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது… தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது நமக்கு பெருமை. இஸ்ரேலிலிருந்து 1150 பேர் இதுவரை இந்தியாவிற்கு வந்துள்ளார்கள்.இது மோடியின் முயற்சியால் இது நடந்துள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்காமல் இருக்கவும் ,எல்லை குறித்து தெரிந்து கொள்ள பல்வேறு கருவிகள் கொடுக்கபட்டுள்ளது.மீனவர்கள் மற்ற நாடுகளின் எல்லைக்கு சென்று மீன்பிடிக்காமல் இருக்க பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. என் மண் ,என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகத்தின் பாஜகவின் வாக்குவங்கி 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிமுக கூட்டணி விவாகரம் குறித்த கேள்விக்கு – தனக்கு தொண்டை வலி பிரச்சனை இருப்பதாக சொல்லி இது குறித்து மேலிடம் பதில் சொல்லும் என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!