Skip to content
Home » கோவையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டு தம்பதியினர்….

கோவையில் குப்பைகளை அகற்றிய வெளிநாட்டு தம்பதியினர்….

  • by Senthil

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் அலெக்சன் டன்லப் மற்றும் ராபர்ட் டன்லப் தம்பதியினர். இவர்கள் சுங்கம் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ரேஸ்கோர்ஸ்,மற்றும் உக்கடம் வாலாங்குளம் சாலையில் நடைபயிற்ச்சி மேற்கொள்ளும் போது நடைபாதையில் கிடக்கும் பேப்பர்கள் ,பிளாஸ்டிக் கப்புகள் போன்ற குப்பைகளை ஒரு பையில் போட்டு எடுத்து சென்று குப்பை தொட்டியில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணி

செய்து வரும் இவர்கள் கடந்த ஒரு வருடமாக கோவையில் தங்கி வருவதாகவும் தங்களுக்கு கிடைத்த நேரத்தில் சேவை மனப்பான்மையோடு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

நடைபயிற்ச்சியின் போது கீழே கிடக்கும் குப்பையை கண்டும் காணாமல் செல்வர்களுக்கு மத்தியில் சமூக அக்கறையுடன் கீழே கிடக்கும் குப்பை சேகரித்து குப்பை தொட்டியில் போட்டு வருவதை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள் இவர்களது செயல்கள் வியப்படைய வைப்பதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!