Skip to content
Home » கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

  • by Senthil

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிறப்ப சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து உள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்து இருக்கின்றார் . உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்ற மோகன் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது அரிதாக வனப் பகுதியில் உலா வருகின்ற வெள்ளை நாகம் என்பது

தெரியவந்தது. பார்சியல் ஆல்பினோ கோப்ரா என்ற வகையைச் சார்ந்த இந்த வெள்ளை நாகம் பத்திரமாக பிடிக்கப்பட்டது. இரண்டடி நீளம் கொண்ட இந்த பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது. சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டு இருக்கின்றது. மழைக் காலம் என்பதனால் இனி பாம்பு பொது இடங்களில் வெளியே உலாவும். பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்து, பாம்பை மீட்க உதவ வேண்டும் என பாம்பு பிடி வீரர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!