Skip to content
Home » கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத தொண்டர்கள்……. போக்குவரத்து மாற்றம்

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் உடல்  கோயம்பேட்டில் உள்ள  கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு  தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.   விஜயகாந்த் உடல்  அங்கு வந்து சேரும் முன்னரே  பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு விட்டனர். நேரம் ஆக ஆக  கூட்டம் மேலும் அதிகரித்தது.  இதனால் அங்கு போக்குவரத்து  ஸ்தம்பித்தது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள்  மற்றும் பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!