கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடையே சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை கரூர் மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் பொதுமக்களுக்கு சமரச விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இந்த சமரசம் விழிப்புணர்வு பேரணியானது குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் துவங்கி கடம்பர் கோவில் வழியாக சென்று சுங்ககேட்டில் நிறைவடைந்தது.
பொதுமக்களிடையே வழக்குகள் குறித்து வழக்கு தரப்பினர்கள் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமுக தீர்வு காண்பது குறித்து கோஷங்களை முழக்கமிட்ட வாறு மாணவ, மாணவிகள் சென்றனர்.
இந்தப் பேரணியில் மாவட்ட சட்டப்பணிகள் செயலர் மற்றும் சார்பு நீதிபதி பாக்கியம், குளித்தலை சார்பு நீதிபதி சண்முக கனி மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர் நீதிபதிகள்பிரகதீஸ்வரன், தினேஷ்குமார், குளித்தலை பார் கவுன்சில் தலைவர் சாகுல் அமீது செயலாளர் நாகராஜன், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.