சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜூனாவின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. யாசகனாக இருந்து கோடீஸ்வரனாக உயரும் ஒருவரின் கதைதான் ‘குபேரா’.
இதில் யாசகனாக நடிக்கிறார் தனுஷ். படம் தொடர்பாக வெளியான போஸ்டர்களில் அடர்ந்த தாடி, தலைமுடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் தனுஷ். இப்படியான சூழ்நிலையில்தான் இந்தப் படத்திற்கு தனுஷ் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குப்பை கிடங்குக்கு அருகே கிட்டத்தட்ட 12 மணி நேரம் அந்தக் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. மாஸ்க் கூட அணியாமல் தனுஷ் அந்தக் காட்சியை முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
தனது யதார்த்தமான கதை சொல்லலுக்காகப் பெயர் பெற்றவர் இயக்குநர் சேகர் கம்முலா. ’குபேரா’ படத்திலும் அதையே செய்துள்ளார். ’இருந்தாலும் தனுஷை 12 மணி நேரம் குப்பை கிடங்கு அருகில் வைத்து பாடாய் படுத்த வேண்டுமா?’ தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.