குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ரேபிட் பிரிவு போட்டிகள் முடிவில் 11 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் வெஸ்லி சோ 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மீதமுள்ள பிளிட்ஸ் சுற்றுகளில் வெற்றி பெற்றால், பிரக்ஞானந்தாவுக்கு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
குரோஷியா செஸ் போட்டி.. 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா
