Skip to content
Home » குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக தேசிய மற்றும் மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை எஸ்விஎஸ்.ஹீரோ ஷோரூமில் நடைபெற்றது ,சமீபத்தில் பாரதப் பிரதமரால் துவங்கி வைத்த  இந்தியா தேசிய அளவிலான போட்டியில் புதுக்கோட்டையைச் சார்ந்த ஜீவா என்ற குத்துச்சண்டை வீராங்கணை வெண்கல பதக்கம் பெற்று புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்தார்.அண்மையில் திருப்போரூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் 64 முதல் 67 இடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய போட்டிக்கு தேர்வானார்.

அதே போட்டியில் 61 முதல் 64 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினை சூரிய பிரபாவும் ,
58 முதல் 61 ஆண்கள் எடை பிரிவில் வெண்கல பதக்கத்தினை  தரணிதரன்ஆகியோரும் பெற்று புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்தனர்.இதனையொட்டி  பாராட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்விஎஸ்.ஜெயக்குமார்  சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார், சங்கத்தின் துணைத் தலைவர் மாருதி  கண மோகன்ராஜ்  வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் சேது கார்த்திகேயன் மற்றும் கேலோ இந்தியா பயிற்சியாளர் காவியா, குத்துச்சண்டை பயிற்சியாளர் காதர் மற்றும் குத்துச்சண்டை பேச்சாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!