Skip to content
Home » திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு இன்ஸ்பெக்டர் பிரபு, உள்ளிட்ட காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த 17வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்ததில் தொடர் திரட்டில் ஈடுபட்டது தெரியவந்தது அந்த சிறுவனிடம் இருந்து 25 சவரன் தங்கம்,வெள்ளி மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .

கல்லக்குடி பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் சுற்றிலும் தோட்டம், வயல் வெளிகள் இருக்கும் பகுதியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 17 வயது சிறுவன் தொடர்ந்து அதே பகுதியில் திருடி வந்துள்ளான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர் – சமீப நாட்களாக சிறு வயதில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!