Skip to content
Home » எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஹரிதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 முறை கடிதம் கொடுத்தும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் எந்த மாற்ற நடவடிக்கையும் சபாநாயகர் மேற்கொள்ளவில்லை என எடப்பாடி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் வரும்  டிசம்பர் 12 ம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!