லியோ வெற்றி விழாவிற்கு போலீசார் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்துள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் 1ம் தேதி லியோ வெற்றி விழா நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளனர். நாளை மறுநாள் லியோ வெற்றி விழா நடைபெறுகிறது. 200 முதல் 300 கார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஸ்சில் வருவதற்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பஸ்சில் வருவதற்கு அனுமதி இல்லை. அனுமதி கேட்ட நேரத்தில் சரியாக நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. லியோ விழாவில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்காக ‘LEO’ என பொறிக்கப்பட்ட தங்க நாணயம் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு வருகிறது.