Skip to content
Home » லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

  • by Senthil

திருச்சி லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் நேற்று இரவு  அடுத்தடுத்து 7 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து  சுமார் 15 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுமணமக்கள் தங்கியிருந்த வீட்டில் மட்டும்  ரூ.6 லட்சம்  ரொக்கம், 13 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கல்லக்குடியை சோந்த சீராளன் என்பவரது மகனன் செல்வத்திற்கு சில தினங்களுக்கு முன் தான் திருமணம் நடந்துள்ளது.  மணமக்கள் தரைதளத்திலும்,  மணமகனின் பெற்றோர்  மாடியிலும் தங்கி இருந்தனர். இரண்டு தளத்திற்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் அங்கு கைவரிசை காட்டி உள்ளனர். மணமக்கள் இருந்த அறையில்  ரூ.6 லட்சம் ரொக்கம்  13 பவுன் நகைகளை கொள்ளையடித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி,  விஜி,  பிஜூ,   உள்பட 7 பேரின் வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர். எந்த இடத்திலும் இவர்கள்  யாரிடமும் சிக்காமல்   சுமார் 15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது தான் ஊரே அமர்க்களப்பட்டது.  திருட்டுகொடுத்த 7 பேரும் லால்குடி  போலீசில் புகார் செய்தனர்.  போலீசார்  வந்து 7 வீட்டையும் ஆய்வு செய்தனர். கைரேகைகளையும் பதிவு செய்தனர். தொடர்ந்து திருடர்களை தேடி வருகிறார்கள்.  இந்த சம்பவம் கல்லக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!