Skip to content
Home » பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர். திருமண விழா  முடிந்து நேற்று இரவு  தம்பதியர்   இருவரும் பைக்கில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இரவு 11 மணி அளவில் பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரி அருகே எதிரே வந்தபோது அந்த வழியாக வந்த   ஒரு  டிப்பர் லாரி  பைக்  மீது நேருக்கு நேர் மோதியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார் .  படுகாயமடைந்த ரேணுகாவை   பெரம்பலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.   அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு,  திருச்சி அரசு மருத்துவமனைக்கு  மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரேணுகா இறந்தார்.  இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  தப்பி ஒடிய  டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். லாரி ஓட்டுநர் சம்பவத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.  விபத்தில் பலியான கோவிந்தராஜ், ரேணுகாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு தான் ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!