Skip to content
Home » திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

  • by Senthil
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்காவல் ராணியம்மன் கோவில் அருகே சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிய லாரி தறிக்கெட்டு ஓடியது. இதன் பின்னால் சென்ற அரசு பஸ் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், புதுக் கோட்டை மாவட்டம் காளப் பனூரை சேர்ந்த பஸ் டிரைவர் பன்னீர்செல்வம், கண்டக்டர் கோபிநாதன் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும்ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட னர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் அனு மதிக்க ப்பட்டார் பஸ்டிரைவர் பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!