முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாள் விழாவுக்காக முரசொலி அலுவலகத்துக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு செயல்பட்டு வரும் நவீனமயமாக்கப்பட்டுள்ள அச்சக பிரிவுக்கு
சென்று நவீன எந்திரத்தில் நாளிதழ் அச்சடிக்கும் முறை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில் கூறியதாவது…. தி.மு.கழகத்தின் வாளும் – கேடயமுமாக திகழும் முரசொலியின் பணிகள் சிறக்கட்டும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.