5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர் , விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கின் நிலைப்பாட்டை அறிவிக்க இயலாது என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
