Skip to content
Home » மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அத்தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு

முன்பு மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு குவாரி தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கவலை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோட்டையால் கிராமத்தில் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாட்டு வண்டி தோழர்களுக்கு முன்பு அரசு அனுமதி வழங்கியதை போன்று மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் இதை நம்பி சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் நம்பி உள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக விடும் எனவே உடனடியாக மாட்டு வண்டி தோழர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் அனுமதி வழங்காவிட்டால் தொழிலாளர்கள் ஒன்று கூடி அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தக்கூடிய சூழல் ஏற்படும் என அத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!