Skip to content
Home » மணப்பாறையில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த பஸ்…8 பயணிகள் காயம்

மணப்பாறையில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த பஸ்…8 பயணிகள் காயம்

  • by Senthil

சென்னையில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி தனியார்  பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள சிறுவை பகுதியை சேர்ந்த தங்கமணி (வயது 45) என்பவர் ஓட்டினார்.

இன்று காலை திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் என்ற இடத்தில்  பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி , அதைத்தொடர்ந்து  அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தேனியை சேர்ந்த புவனேஷ்வரி (25), செல்வ ராஜ்(55), வேல்முருகன்55), சுருளிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(63), வேல்மணி(47), காளியம்மாள் (77 ) உள்ளிட்ட 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின் கம்பத்தில் பஸ் மோதியதில் மின்கம்பம் முறிந்து சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!