பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வேட்பாளரை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு முசிறி ஒன்றியத்தில் ஆதரவு திரட்டினார். அப்போது அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:
முசிறி.மண்ணச்சநல்லூர் மக்களின் அடிப்படைத் தேவைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் . தமிழக முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு தடை போடுகிறது. ஆனாலும் நிதி நெருக்கடியிலும் மக்கள் பணி்களை இந்த அரசு செய்கிறது. தமிழகம் கல்வி, தொழில், மருத்துவத்தில் இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மக்கள் பணி தொடர நீங்கள் உதயசூரியனில் வாக்களித்து அருண் நேருவை அமோகமாக வெற்றி பெறச்செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க அருண்நேருவை வெற்றிபெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார். வேட்பாளர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வாழ்த்தி உதயசூரியனுக்கே வாக்களிப்போம் என்றனர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் எம் எல் ஏ தியாகராஜன், மண்ணச்சநல்லூர் கதிரவன் எம்.எல்.ஏ., முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ம திமுக டிடிசி சேரன், திமுக பிரமுகர் கருணைராஜா, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காட்டுக்குளம் கணேசன் தங்கையன் வசந்தகுமார், பிரகதீஸ்வரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்