Skip to content
Home » மகனுக்கு பெண் கேட்ட தந்தைக்கு அரிவாள் வெட்டு….காதலன் மீதும் தாக்குதல்..பரபரப்பு….

மகனுக்கு பெண் கேட்ட தந்தைக்கு அரிவாள் வெட்டு….காதலன் மீதும் தாக்குதல்..பரபரப்பு….

  • by Senthil

மயிலாடுதுறை அருகே கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தியானேஸ்வரன் (24)சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும்கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் கொடுக்க பெண் வீட்டார் ஒத்துக் கொண்டுள்ளனர். ஆனால், தியானேஸ்வரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால், திருமணம் செய்து வைக்காமல் காலதாமதப்படுத்தியுள்ளனர். இதனால், தியானேஸ்வரன் குடும்பத்தினர் கடந்த ஆறு மாதமாக பெண் கேட்டுள்ளனர். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த தியானேஸ்வரன் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. தியானேஸ்வரனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது தந்தை சந்திரசேகரனை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சந்திரசேகரனுக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சந்திரசேகரனை தாக்கியவர்கள் அங்கே இருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து சந்திரசேகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த தியானேஸ்வரனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!