சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதி

முழுவதும் சூழ்ந்துள்ள அடர்ந்த கரும்புகை காரணமாக உள்ளூர் பொதுமக்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
