Skip to content
Home » மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில் டிடிவி தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு  நடந்தது. இந்தநிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நான் எந்த சொத்தும் இதுவரை வாங்கவில்லை, எந்த தொழிலும் நான் செய்யவில்லை, விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். 1989ம் ஆண்டுக்கு பிறகு என் மீது எந்த சொத்தும் கிடையாது; நான் சொத்துக்கள் வாங்கியதே கிடையாது. திமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜிரோவும் (ஓபிஎஸ்) ஜிரோவும் (டிடிவி தினகரன்) இணைந்தால் ஜீரோ தான். டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான். டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது.கிரிக்கெட் மட்டும் பார்க்காமல் சபரீசனையும் பார்த்ததால் திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என உறுதியாகி உள்ளது. ஓபிஎஸ் உடன் இருந்த வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் எங்கே போனார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு கிளைச்செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர். பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை .

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!