மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்கள் மீட்கப்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் முயற்சியால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட செல்போன்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளரிடம்
ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கைப்பற்றப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.