Skip to content
Home » மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

  • by Senthil

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32,ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 58,அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரியலூர் மாவட்டம் வெண்ணங்குழி கபாடி அணியுடன்,

மயிலாடுதுறை மாவட்டம் தொடுவாய் கபாடி அணியினர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடுவாய் ரேணுகாதேவி அம்மன் கபாடி அணியினர் 24, புள்ளிகளும் அதனை எதிர்த்து விளையாடிய வெண்ணங்குழி கங்கா பிரதர்ஸ் கபாடி அணியினர் 19,புள்ளிகள் பெற்றனர். இப்போட்டியில் தொடுவாய் கபாடி அணியினர் கூடுதலாக 5,புள்ளிகள் எடுத்து முதல் பரிசான 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 25, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கோப்பையை தட்டி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!