தமிழகத்தில் நேற்று கடுமையான வெயில் சட்டெரித்தது. ஈரோட்டில் 109 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் காலையிலேயே வெயில் வாட்டுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
அதன்படி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.