Skip to content
Home » மேட்டுப்பாளையம் அருகே துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் மனித சடலம் மீட்பு.

மேட்டுப்பாளையம் அருகே துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் மனித சடலம் மீட்பு.

காரமடை அருகே உள்ள தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மனித சடலம் ஒன்று சிதைந்த நிலையில் துண்டுதுண்டாக கிடப்பதாக காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரனுக்கு தகவல் வந்துள்ளது. அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜிக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையிலான போலீசார் அங்கு துண்டுதுண்டாக சிதைந்த நிலையில் கிடந்த மனித சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.மேலும்,கோவையில் இருந்து மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வீரா அங்குள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு யாரையும் பிடிக்கவில்லை.

மேலும், கோவையிலிருந்து தடய அறிவியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து சம்பவ இடத்தில் கிடந்த சடலத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.மேலும்,சம்பவ இடத்தின் அருகே கற்களை வைத்து வழிபாடு செய்திருப்பதால் ஒருவேளை நரபலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஆணா? பெண்ணா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் காரமடை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!