Skip to content
Home » மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான பால், உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கவும் தன்னார்வலர்கள் பலரும்  களமிறங்கியுள்ளனர்.

நிவாரண உதவி வழங்கும் பாலா
நிவாரண உதவி வழங்கும் பாலா

இந்த நிலையில், சின்னத்திரை நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் ஆகியோர் பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கினர். ஏற்கெனவே 2 நாட்களுக்கு முன்பு பாலா, ரூ.2 லட்சம் செலவில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாலா, அமுதவாணனுக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!