Skip to content
Home » கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள போட்டிகளும், ஐந்தாம் தேதி மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடைபெற உள்ளது. குழு போட்டியில் சிறந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து வீராங்கனைகளுக்கும், அதிக புள்ளிகள் பெற்ற இரண்டு பள்ளி மற்றும் இரண்டு கல்லூரிக்கும் என மொத்தம் 14 கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்பட இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது… முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு குழுப் போட்டிகள், தனிநபர் போட்டிகள் இந்த வாரமும், அடுத்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது. முதல்வர் பிறந்த நாளையொட்டி வரும் மார்ச் 5ம் தேதி கரூரில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!