Skip to content
Home » வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Senthil

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம் சுற்றுச்சுவர் போல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விளம்பர் போஸ்டர்கள் ஒட்டத்தான் பயன்பட்டு வருகிறது.

எனவே, ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து இணைத்து, நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து வருபவார்கள் எளிமையாக ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வகையில், பாலம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இப்போது உள்ள பாலத்தின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுத்தேர்வை பயமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால், பொது தேர்வின்

போது பலர் விடுப்பு எடுத்தனர். இம்முறை, மாணவர்களுக்கு தேவையான பயற்சிகளை ஆசிரியர்கள் அளித்துள்ளனர். இது மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை காட்டிலும், இந்தாண்டு பொது தேர்வின் போது விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம குறையும். மேலும், கடந்த ஆண்டை காட்டிலும், தேர்வு முடிவுகள் நல்லபடியாக இருக்கும்.

மாணவர்கள் படிக்க வரும் இடம் மட்டுமே தான் பள்ளிக்கூடம். மாணவர்களை படிப்பு சார்ந்த விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் மீறி வேறு பணிக்கு பயன்படுத்தினால், அவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!