Skip to content
Home » அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை விடுவித்தனர். மீண்டும் இன்று  மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.

இதற்கிடையே இன்று காலை அமைச்சர் பொன்முடியிடம் , முதல்வர் மு.க. ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பொன்முடியுடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

மாலை 3.30 மணி அளவில்  அமைச்சர் பொன்முடி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை  அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!